Tuesday, December 20, 2016

தாமரை மற்றும் அல்லி வீட்டில் வளர்ப்பது எப்படி

    
     தாமரை மற்றும் அல்லி, இரண்டையும் விதை அல்லது வேர்த் தண்டு மூலம் உற்பத்தி செய்யலாம். தாமரை விதை அளவில் 0.30இஞ்ச் முதல் 0.90 இஞ்ச் அளவில் இருக்கும். அல்லியின் விதை கடுகளவே(கடுகைவிட சிறியதாகவும்) இருக்கும். முதலில் தாமரையைப் பற்றி பார்க்கலாம், 



  

  


  

 



   
தாமரை: 
 

தாமரை விதை முளைப்பதற்கு மிக அதிக காலமாகும் ( மிகவும் அதிகம்). அதனால் விதையின் ஏதேனும் ஒரு பக்கத்தை உப்பு காகிதத்தில்(sand paper or pile) தேய்த்து, ஒரு பாட்டிலில் சூடான நீர் விட்டு(சாதாரண நீரும் விடலாம்) அதில் அந்த விதையை போட்டு ஜன்னல் ஒரத்தில் வைக்க வேண்டும். (விதையில் ஓட்டையும் போடலாம் ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதை), தினமும் அந்த நீரை மாற்றி வருவது நல்லது. விதை இரண்டு அல்லது மூன்றாவது நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்துவிடும், விதை முளைத்து வர வர பெரிய பக்கெட் தண்ணீரில் மாற்றி விடுவது நல்லது. இரண்டு இலைகளுக்கு மேல்(தண்ணீருக்கு மேல்) வந்த உடன் நடவு செய்யலாம். விதையின் முளைப்புத் திறனைப் பொருத்து இதற்கு இரண்டு வாரமும் அல்லது மூன்று வாரமும் ஆகலாம்.
      நீங்கள் விதை தயார் செய்த முதல் நாளே ஒரு பிளாஸ்டிக் டப்பிலோ சிமென்ட் தொட்டியிலோ களிமண்(கிடைக்காத பட்சத்தில் செம்மண்) 5 இஞ்ச் அளவிற்கு நிரப்பி அதில் நீர் விட்டு, அதனுடன் பத்தில் ஒரு பங்கு காய்ந்த மாட்டு எரு(வரட்டி) அல்லது ஆட்டு எரு நன்கு கலந்து மண்ணில் உள்ள கற்கள் மற்றும் தேவையற்றவைகளை நீக்கி விட வேண்டும். சிறிது நாட்கள் அப்படியே இருந்தால் தான் விதை நடவு செய்வதற்குள் மண் சரியான பதத்திற்கு வரும். மேலே குறிப்பிட்டது போல் விதையில் இரண்டு இலைகள் தண்ணீருக்கு மேல் வந்த உடன் நடவு செய்யலாம். அதற்கு முதலில் தொட்டியில் உள்ள நீரை எடுத்து விட்டு, விதையை நட்டு அதன் மேல் சிறிய கூழாங்கள்ளை வைத்து விடுவது நல்லது, இல்லையென்றால் விதை மிதக்க ஆரம்வித்துவிடும். அந்த களி மண் மேல் ஆற்று மண்ணோ அல்லது சிறிய கூழாங்கற்களை சேர்ப்பது அவரவர் விருப்பம். பிறகு பொருமையாக தொட்டியில் நீர் நிரப்ப வேண்டும். கண்டிப்பாக இந்த நீரில் கொசு முட்டை வைக்கும். அதனால் இரண்டு நாட்கள் கழித்து அந்த தொட்டியில் மீன்களை சேர்க்க வேண்டும், கம்புசியா, கப்பீஸ், மாலி, ஸீப்ரா வகைகளில் ஏதேனும் ஒரு வகை மீன்களை சேர்க்கலாம். தொட்டியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். தினமும் நீர் குறைய குறைய நீர் சேர்த்து வர வேண்டும்.
     தாமரை விதை மூலம் வளர்ந்து பூக்க 1,5 வருடம் முதல் இரண்டு வருடம் கூட ஆகலாம், அதனால் வேர்த் தண்டு மூலம் வளர்ப்பதே சிறந்தது. விதையின் மூலம் தொடங்குவதாக இருந்தால் மார்கழி மாதம் முடிந்தவுடன் தொடங்கவும்.

அல்லி:




     அல்லியில் நிறைய வகைகள் உள்ளன. அல்லி மூன்று முதல் நான்கு மாதத்திலேயே பூக்க ஆரம்பிக்கும். அல்லியின் விதை மிகவும் சிறியது. அதனால் தண்ணீர் விதையை முளைக்க வைத்து நடவு செய்வது சிரமம், அதனால் ஒரு சிறிய கப்பில் களிமண் நிரப்பி அதில் சில விதைகளை தூவி அதன் மேல் ஆற்று மணல் சிறிது நிரப்பி அதை ஒரு பக்கட்டிலோ அல்லது தாமரை நடவு செய்த தொட்டியிலோ வைத்து நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து விட வேண்டும். அதன் மேல் பாசி படிந்தால் நீக்கி விட வேண்டும், விதை மூன்று முதல் நான்கு வாரங்களில் முளைக்கும். சில சமயம் இன்னும் தாமதமாகலாம். விதை முளைத்து சிறிது வளர்ந்தவுடன் பிரித்து தனி தனி டப்பில் நடலாம்.
   

 

 '


   

 


    தாமரை விதை நாட்டு மருந்து கடைகளிலும், பூக்கடைகளிலும் (பூ மார்க்கெட்களிலும்) மிகவும் மளிவான விலையில் கிடைக்கும். அல்லி விதை ஆன்லைனில் வாங்கலாம்.

Monday, December 24, 2012

நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்



கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது
யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை
ப்ளூ லாரி உருளுது பிரளுது.


பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.
பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.AudioFile
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.Audio File
ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிறைய மயிர்.AudioFile

பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.AudioFile
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டனAudio File
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது AudioFile
யார் தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டைAudio File
ப்ளூ லாரி உருளுது பிரளுது.
காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?AudioFile
பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு AudioFIle

ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல AudioFile
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.... Audio File
சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு !!! Audio File
அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள் இவள் அவலளந்தால் அவள் அவலளப்பாள் அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால் எவள் அவலளப்பாள் ? Audio File
குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது.AudioFile
திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்"
Audio File
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
கரடி கருங்கரடி ,கரடி பொடனி கரும் பொடனி Audio File
நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை Audio File
நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்...!
வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்!!!Audio File
நாளும் கிழமையும் விழுப்புரத்தில் விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்...! Audio File
அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை மயிர்Audio File
ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை Audio File
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
தாழை ஓலை நிழல் Audio File



பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!Audio File

வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்! Audio File

சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை!Audio File


கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.Audio File

கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும் Audio File

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை Audio File

உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு Audio File

கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும் Audio File

கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும் Audio File


ஆனை அலறலோடு அலற அலறியோட
சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை
புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா.
வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.
துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.
கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!
லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு

வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.

வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.

கூவுற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி கொழுகொழு கோழி கொழுகொழு கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி சிக்கற கோழி சிக்கற கோழி திங்கற கோழி
சஞ்சல சலசல சலநீர் விழ விழ விழுந்தால் வெளுக்கும் வெயில் பட்டா சிவக்கும் வறுத்தா மணக்கும் வாயில் போட்டால் தித்திக்கும். - இலுப்பை பூ
குரங்கின் வாலும் வாழைப்பழத் தோலும் நாயின் வாலும் சின்னப் பையன் வேலும்
கோடு போட்ட வீடு கோலம் போட்ட வீடு வேப்ப மர சந்து வேணுகோபால் வீடு
பரதநாட்டியம் பரந்த நாடு பழைய நாட்டியம் பரதநாட்டியம்.
கும்பகோணம் குள்ளக் குமரேசன் , குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை குளத்தில் குதித்தது..


தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி; தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி ; தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி; தக்காளி தக்காளி அருமையான தக்காளி..

Thursday, June 16, 2011

500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்நியாவில் தடை செய்ய என்ன காரணம்



            அன்மையில் பாபா ரம்தேவ் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து ஆக வேண்டும் என்று கூறினார்.  இது மக்களுக்கு பெரிதும் ஏன் என்ற அச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய ஊழல் நிறைந்த இந்தியாவின் தேவையும் அது தான்.  அப்படி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய பல காரணங்களும், தடை செய்தால் பல நன்மைகளும் ஏற்படஇருக்கிறது.  அதைப் பற்றி இந்தப் பதிவில்  பார்ப்போம். முதலில் ரூபாய் நோட்டுககளை தடை செய்ய என்னென்ன காரணம் என்று பார்ப்போம்.  
                            

  முழு முதற் காரணம்:         
மொத்த இந்திய வருவாயை இப்படி பிரிக்கிறார்கள்.
100 ரூபாய் நோட்டுக்கள் = 23%
500 ரூபாய் நோட்டுக்கள் =44%
1000 ரூபாய் நோட்டுக்கள்=24%
இந்தியாவின் மொத்த (100%) வருவாயில் 93% சதவிதம் 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக அச்சடிக்கிறார்கள்.
சில நாடுகளின் தனி மனித சராசரி ஆண்டு வருமானம்(per capita income) எவ்வளவு என்று பார்த்தோமானால்,  US–ல் 40000$ ஆகவும்,UK-ல் 20000£ ஆகவும், ஜப்பானில் 40,00,000¥ ஆகவும் இருக்கிறது.  ஆனால் இதுவே இந்நியாவில் ரூபாய் 46,492 ரூபாயிலிருந்து 54,527 ரூபாய் உயர்ந்திருக்கிறது.( Feb 7,20ll நிலவரப்படி).  இதை நாம் US $ல் கணக்கிட்டால் 46,492 ரூபாய்=1,037.19 US $ (june 16 நிலவரப்படி).
தனி மனித சராசரி ஆண்டு வருமானத்தை(Per capita income) நமது அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களாய் பிரித்தால் நமக்கு ஒரு சூனிய எண் கிடைக்கும். அது USல் 400 ஆகவும், UKல் 400 ஆகவும், ஜப்பானில் 400 ஆகவும், இந்தியவில் 47 ஆகவும் இருக்கிறது(1000 ரூபாய் நோட்டுக்களை நம் எடுத்துக் கொண்டால்).   ஆக இந்தியாவிற்கு இது மிகவும் குறைவு, இதை  400 ஆக்க வேண்டும்.
ஆனால் US-ல் அதிக $ நோட்டுக்கிள் மதிப்பு 100$ ஆகவும், UK-ல் 50£ ஆகவும் இருக்கிறது,  ஆனால் இந்தியாவில் தனி நபரின் சராசரி வருமானம் 1041$ (46,492 ரூபாய் ) ஆக இருக்கும் போதிலும், நமது அதிக ரூபாய் நோட்டின் மதிப்பு 1000 ஆக இருக்கிறது.
40000$ = 100$
1037$   = ?
            ஆக இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களின் அதிக மதிப்பும் 100 ரூபாய்க்கும் மேல் இருக்க கூடாது என்பது நமக்கு புலப்படுகிறது.
இரண்டாம் காரணம்:
  தற்போது ஊழல் நிகழ்வது எல்லாம் கோடி கணக்கில் தான். 
1 கோடி ரூபாய் லஞ்சம் 50, 100 ரூபாய நோட்டுக்களாக கொடுத்ததாக கேள்விப்பட்டதுண்டா..?  அந்த மாதிரி சம்பவங்கள் மிகவும் அரிது, நாம் கேள்வி பட்டதும் இல்லை.  பெரும்பாலும் லஞ்சப் பணம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் கைமாறுகிறது. 
மூன்றாம் காரணம்:
போலி ரூபாய் நோட்டுக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் இருக்கிறது.  ஊடகங்களின் அறிக்கையின் படி 1,69,000 கோடி ரூபாய் முதல் 2,00,000 கோடி ரூபாய் வரை இந்தியாவில் போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. 
எங்கேனும் கோடி கணக்கான ரூபாயில் 50, 100 ரூபாய் நோட்டுக்களில் போலி நோட்டுக்களை கண்டதுண்டா..?
நான்காம் காரணம்:
ஒரு நாடு முன்னேற்றம் அடைய அந்நாட்டின் பண பரிவர்தனை வங்கிகள் மூலமாக நடக்க வேண்டும். முன்னேறிய நாடுகளில் 90% பணபரிவர்த்தனை வங்கிகள் மூலமாக நடக்கிறது.  ஆனால் இந்தியாவில் 20% மட்டுமே வங்கிகள் மூலமாக நடக்கிறது.  இந்தியாவில் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை அதிகம் நடக்காததற்கு அதிக மதிப்பு ரூபாய் நோட்டுக்களும் ஒரு காராணம்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட $ நோட்டுக்கள்:
அமெரிக்காவிலும் 1969ல் ஊழலை ஒழிப்பதற்காக அதிக மதிப்பு கொண்ட $ நோட்டுக்களை தடை செய்திருக்கின்றனர்.  அந்த சமயத்தில் அமெரிக்க ஊழல் நிறைந்த நாடாக இருந்தது.  அப்போது அங்கு வங்கி பரிவர்த்தனையும் இல்லை.  எல்லா பண பரிவர்தனையும் 500, 1000, 10000,100000 $ நோட்டுக்கள் மூலமாக தான் நடந்தது. 
அப்போது இருந்த ஊழலால் மக்கள் பெரிதும் அவதி பட்டனர்.  அப்போது அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் துணிந்து ஒரு முடிவு எடுத்தார்.  அதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.  அவர் 1969ல் 100$ நோட்டுக்கு மேற்ப்பட்ட அனைத்து $ நோட்டுக்களையும் தடை செய்தார். அதனால் ஊழலும் பெரிதும் குறைந்தது.  வங்கி பரிவர்த்தனையும் பெரிதும் வளர்ந்தது. 
அமெரிக்காவை போல் இந்தியாவிலும் 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு தடை செய்தால் என்ன நடக்கும்..? 
கொஞ்ச நாளுக்கு எதுவும் நடக்காது, முதலில் இது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சில மாதங்கள் சற்று சிரமமாக இருக்கும்.  பிறகு மக்கள் வங்கி பரிவர்த்தனையை உபயோகிக்க தொடங்கி விடுவார்கள்.  ஒரு மாற்றம் வேண்டுமானால் சிறிது சிரமப்பட்டுதான் ஆக வேண்டும்.
ஒரு நாட்டில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அந்த நாடு ஊழல் மிகுந்த நாடாகவும், ஊழல் மிகுந்த அரசியலாகவும் இருக்கும்.
ரிஸரிவ் ரிஸ்ர்வ் வங்கி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய எந்த அதிகாரமும் கிடையாது.  இந்திய அரசாங்கத்திற்கு தான், அதை தடை செய்ய அதிகாரம் இருக்கிறது.  ரிஸர்வ் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் வேளையை மட்டும் தான் செய்யும், அதில் என்ன அச்சடிக்க வேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் தான் முடிவு செய்யும். 
இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்க இதுவே சிறந்த வழி.  இந்த தடையை அரசு கொண்டு வர வேண்டும்.  இத்தடையை கொண்டு வர வரவேற்போம் .., ஆதரிப்போம்..,  இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்குவோம்.